Saturday, April 3, 2010

'டீ' இல் பாலை சேர்க்கக்கூடாது..


உலகம் முழுவதும் மக்கள் அதிக அளவில் விரும்பி அருந்தும் பானம் 'டீ'.இந்த 'டீ' இல் நிறைய சத்துக்கள் இருகின்றன.அனால் இத்தனை சத்துகள் இருந்தும் நாம் அதை வீணடிகிறோம்.டீ சுவையாக இருக்க நாம் சேர்த்தும் பால் இந்த சத்துகளை உறுஞ்சி எடுத்து விடும்.

வாகனத்தில் இருந்து வரும் புகை,குப்பையால் ஏற்படும் மாசு வாயு,சிகரெட் பீடி ஆகியவற்றிலிருந்து வெளியேறும் புகை போன்றவற்றல் நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.இதன் விளைவாக 'ப்ரீரேடிக்கல்ஸ்' நம் உடலில் உருவாகி ஆபத்தை ஏற்படுத்துகிறது.இதன் முலம் கேன்சர்,ஆஸ்துமா,இதய நோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

'டீ' இல் இருக்கும் 'பிளேவ்னாய்டு' என்னும் ஒருவகை பொருள் மாசுப்பொருட்களை முறியடிக்கும் தன்மை கொண்டது.நம் உடல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்சத்துகள் 'டீ' இல் உள்ளது.மேலும் நம் உணவில் இருந்து சத்துகளை பிரித்து எடுக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6 ஆகியவை 'டீ' இல் உள்ளன.கேன்சர் கட்டிகளை தடுக்கும் பைட்டோ கெமிக்கல்,இதயம் சம்மந்தபட்ட நோய்களை தடுக்கும் பொட்டாசியம் மெக்னீஷியம் ஆகியவை 'டீ' இல் உள்ளது.மேலும் 'டீ' அருந்துவதால் நம் இதயதுடிப்பு சீராகிறது.

'டீ' இல் பாலை சேர்க்கும் போது இந்த சத்துக்கள் வீணாகிறது.'டீ' இல் சர்க்கரை அல்லது எலுமிச்சை சேர்த்துக்கொண்டால் இந்த சத்துக்கள் பதிக்கப்படாது.இதை பின்பற்றுவதால் தான் வெளிநாடுகளில் கேன்சர் பாதிப்பு குறைத்து கொண்டிருகிறது.இந்தியர்கள் நிறைய பேர் 'டீ' மற்றும் பால் சேர்த்து குடிப்பதால் கேன்சர் குறைவதில்லை.

டீ துளை வெறும் மூன்று நிமிடங்கள் மட்டும் தான் கொதிக்க வைக்க வேண்டும்.அப்பொழுது தான் டீ இன் முழு சத்தும் கிட்டும்.சிறுநீரக தொல்லை உள்ளவர்கள் டீத்துளை இரண்டு நிமிடங்கள் மட்டுமே கொதிக்க வைக்க வேண்டும்.பால் சேர்க்காமல் டீ அருந்தினால் உடலில் எதிர்ப்பு சக்தி கூடும்.

Friday, April 2, 2010

jokes


மகன் : அம்மா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் அதுக்கு என்ன மா அவசரம்???
அம்மா : டேய் உனக்கு கல்யாணத்திற்கு அவசரம் இல்லாம இருக்கலாம்.அனால் எனக்கு அப்படி இல்ல எனக்கு டிவி, வாஷிங் மேஷின்,கிரெயின்டர் இதேல்லாம் தேவபடுத்தே...


"சும்மா சும்மா நம்ம பையன புறம்போக்குன்னு திட்டாதிங்க.."
"ஏண்டி அதுக்கு இப்போ என்ன??"
நம்ம பாகத்து வீட்டு அரசியல்வாதி அவன வளச்சுப் போட்ரபோறாரு


"ஏன் சார் உங்க மனைவி நேத்து உங்களை அடிச்சாங்களா??"
"நீங்க எப்படி கண்டுபிடிச்சிங்க??"
"உங்க வீட்ல டிவி சவுண்ட் ரொம்ப அதிகமா இருந்துச்சே..."

Wednesday, March 31, 2010

கோப்பையின் மரணம்


இது ஜென் குரு இக்கியு வின் வாழ்கையில் நடந்த ஒரு சம்பவம்
ஒரு முறை ஜென் குரு இக்கியு இளைஞராக இருந்த போது ஒரு ஆசிரமத்தில் சீடராக இருந்தார்.அவரின் குருவிற்கு தாகம் எடுத்தது ஜென் னை அழைத்து தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்.ஜென் தண்ணீர் கோப்பையை கொண்டு வரும் பொது அது கை நழுவி கீழே விழுந்தது.ஜென் னை பிடிக்காத சிலர் 'ஜென் இன்று குருவிடம் நன்றாக மாட்டிக்கொண்டான்' இன்று கிண்டல் அடித்தனர்.

இதை பார்த்த இக்கியு குருவிடம் கேட்டார் 'குருவே மரணம் என்பது வருந்ததக்கதா?' என்றார்.அதற்கு குரு 'மரணம் என்பது இயல்பானது என்றும் அதற்கு வருத்தப்பட தேவையில்லை என்றார்.உடனே இக்கியு குருவிடம் 'குருவே உங்கள் தேநீர்க் கோப்பை மரணம் அடைந்து விட்டது வருத்தப் படாதீர்கள்' ஏன்று சொன்னார்.